நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அதன்படி மலைக்கோட்டை நுழைவுவாயிலில் பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.
இதேபோல் மெயின்ரோட்டில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் இருந்தும் பக்தர்கள் புறப்பட்டு சென்று கிரிவலம் சென்றனர்.
அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அபிராமி அம்மன்- ,பத்மகிரீஸ்வரரை சுமந்தபடி பக்தி பாடல்கள் பாடியபடி வலம் வந்தனர். கிரிவல பாதையில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.