ADDED : மே 03, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் பூம்பாறை மன்னவனுார் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏதுவாக சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு இன்றும் தடை செய்யப்படுவதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மன்னவனுார், பூம்பாறை வனப்பகுதியில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. வனத்துறை ,தீயணைப்பு துறை வாகனங்கள் எளிதில் சென்று வரவும், தீயை விரைவில் அணைக்கவும் இரண்டு நாட்கள் பூம்பாறை பிரிவிலிருந்து மன்னவனுார், கூக்கால் ரோடுகளில் சுற்றுலா வாகனங்கள் , கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி இன்றும் தொடர்வதால் மேலும் ஒரு நாள் தடை செய்யப்படுகிறது. உள்ளூர் கிராம மக்கள் வாகனங்களுக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளார்.