sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்

/

நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்

நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்

நிலத்திற்கு இழப்பீடு தராமல் பணி துவங்கியதால் மறியல்


ADDED : பிப் 27, 2025 01:37 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை; திண்டுக்கல் நகரை சுற்றி புறச்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பணம் வழங்காமல் பணிகள் துவங்கியதை கண்டித்து விவசாயிகள், பொது மக்கள் விளைந்த நெல் கதிருடன் கருப்புக்கொடியை ஏந்தியபடி ரோடு மறியல் செய்தனர்.

திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச் சாலையில் முள்ளிப்பாடி பகுதியில் இருந்து நத்தம் நெடுஞ்சாலையை குறுக்கே திண்டுக்கல் மதுரை நான்கு வழிச் சாலையில் பஞ்சம்பட்டி பகுதி வரை 21 கி.மீ., துாரத்திற்கு புறச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிலம் கையகம் செய்யப்பட்டது. பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் கையகம் செய்யப்பட்ட இடங்களுக்கு எந்தவிதமான பதில் அளிக்காமலும், உரிய இழப்பீடும் வழங்காமலும் பணி துவங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் ஒத்தக்கடை அருகே தங்கள் நிலத்தில் விளைந்த நெல் பயிர், பருத்திச் செடிகளுடன் கருப்பு கொடியேந்தியபடி விவசாயிகள் ,மக்கள் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூற போராட்டம் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us