sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் கடையடைப்பு எதிரொலி பக்தர்களுக்கு உணவு ,குடிநீர் வழங்கல்

/

பழநியில் கடையடைப்பு எதிரொலி பக்தர்களுக்கு உணவு ,குடிநீர் வழங்கல்

பழநியில் கடையடைப்பு எதிரொலி பக்தர்களுக்கு உணவு ,குடிநீர் வழங்கல்

பழநியில் கடையடைப்பு எதிரொலி பக்தர்களுக்கு உணவு ,குடிநீர் வழங்கல்


ADDED : ஜூலை 13, 2024 09:46 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநியில் கோயில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு உணவு ,பால் ,குடிநீர் வழங்கப்பட்டது.

பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் ,தனிநபர் வாகனங்கள் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் கோயில் நிர்வாகம், வருவாய்த்துறையினர் எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கிரிவீதி, அருகில் உள்ள வீதிகள் ஆகியவற்றை கையகப்படுத்த முயற்சி செய்வதாக அரசின் ஹிந்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தை கண்டித்து சில நாட்களுக்கு முன் தி.மு.க.,வை சேர்ந்த பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று (ஜூலை13) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பழநியில் அனைத்து கடைகளையும் அடைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த நகராட்சி தி.மு.க., தலைவர் தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., கம்யூ., வி.சி.க., காங்., உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன .நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிந்த நிலையில் பால், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

இதைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்களுக்காக பழநி கோயில் நிர்வாகம் சார்பில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் கிரி வீதி பாத விநாயகர் கோயில், தண்டபாணி நிலையம், வின்ச் ஸ்டேஷன், ரோப் கார் ஸ்டேஷன், சுற்றுலா பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் உணவு, பிஸ்கட் பாக்கெட், பழங்கள், பிரட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கிரிவீதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயிலில் 8000 பேருக்கு மேல் அன்னதானம் , குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.






      Dinamalar
      Follow us