ADDED : மே 10, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு சாய்பாபாவிற்கு நாள்தோறும் அபிஷேகம் நடக்கும் நிலையில் வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம்,பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
நேற்று பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜை, பஜனைகள் தொடங்கி சப்பாத்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.