ADDED : ஜூன் 29, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார், ; பழநி அருகே பெரிச்சிபாளையத்தில் கோயில் திருவிழாவில் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பழநி அருகே பேரிச்சிபாளையத்தில் உச்சி மாகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கோயில் உற்ஸவர் சிலையுடன் ஊர்வலம் வந்தனர். அப்போது குடிபோதையில் சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி கோயில் சப்பரத்துடன் பேரிச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.