sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் மழை: போக்குவரத்து பாதிப்பு

/

'கொடை'யில் மழை: போக்குவரத்து பாதிப்பு

'கொடை'யில் மழை: போக்குவரத்து பாதிப்பு

'கொடை'யில் மழை: போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 16, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 16, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. 2 வது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல்,அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையால் திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை நீர் ரோட்டில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் விவசாய பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் 3 நாட்களாக மொத்தம் 120 மி.மீ., மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சாரல் பெய்யும் நிலையில் பயணிகள்ஏரியில் படகு சவாரிசெய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு


நாயுடுபுரம் குறிஞ்சி ஆண்டவர் கோயில் சந்திப்பு ரோட்டில் மழையால் ரோடு சேதமடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் குறுகிய ரோடான இப்பகுதியில் வாகனங்கள கடந்து செல்ல முடியாமல் 2வது நாளாக அவதி ஏற்பட்டது. வாகனங்கள் விபத்தில் சிக்கின.

நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறை பள்ளத்தை கண்துடைப்பாக சீர் செய்த போதும் மீண்டும் மழை பெய்து மேலும் சேதமானது. இதனால் பல மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நாயுடுபுரம், ஏரிச்சாலை சந்திப்பு வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us