
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : - கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
நேற்று காலை முதலே சாரல் மழை பெய்ய மாலை வரை மிதமான மழையாக பெய்தது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. மழையால் கீழ்மலைப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. பயணிகள் விடுதிகளில் முடங்கினர். இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.