sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்

/

ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்

ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்

ரோடுகளில் கழிவு நீரை விடுவோர்களிடம் கண்டிப்பு காட்டலாமே; சுகாதார சீர்கேடு, விபத்து ஏற்படும் அவலம்


UPDATED : மே 18, 2024 06:58 AM

ADDED : மே 18, 2024 06:13 AM

Google News

UPDATED : மே 18, 2024 06:58 AM ADDED : மே 18, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாய்மை பாரதம் என மத்திய அரசு பெரும் திட்டத்தை வகுத்து திறந்தவெளி கழிப்பிடமே இருக்க கூடாது என வீடுகளிலே கழிப்பறைகள் அமைக்க மானியம் வழங்குகிறது.

இதுதவிர பொது சுகாதார வளாகங்களும் அதிகளவில் அமைக்கப்படுகின்றன. இப்படி துாய்மை நாட்டிற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் சேகரமாகும் கழிவு நீரை எவ்வித தயக்கமும் இல்லாமல் நடுரோட்டில் ஊற்றும் பழக்கம் பரவலாக அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது.

பல இடங்களில் வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ரோட்டில் விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் விடப்படும்போது அவ்விடத்தில் தார் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.

பொதுவாக ரோடு புதுப்பித்தல் பணி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் அதுவரை அதே நிலை நீடிக்கிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை கண்டு டூவீலர் போன்ற இலகு ரக வாகனங்கள் ஒதுங்கி செல்ல முற்படும்போது மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டில் கழிவு நீர் ஊற்றும் நிலை மாற அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் மாற்றம் ஏற்படும்.






      Dinamalar
      Follow us