ADDED : மே 03, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாகர்கோவில்- கோவை ரயில் வந்தது.
சோழவந்தானிலிருந்து ஒரு பாட்டி 3 பேரன்களோடு பயணித்தார். சிறுவர்கள் தண்ணீர் பிடிக்க இறங்கினர். ரயில் சென்றதால் சிறுவர்கரால் ஏறமுடியவில்லை. பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியோடு திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் 3 சிறுவர்களையும் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மகாராஷ்டிரா லோக் மணிக் திலக் பகுதியிலிருந்து வந்த திருநெல்வேலி ரயிலில் சேலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் வீட்டில் சண்டையிட்டு தனியாக வந்தார். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.