/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடிக்க பாயும் தெரு நாய்கள்... குதறும் கொசுக்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்
/
கடிக்க பாயும் தெரு நாய்கள்... குதறும் கொசுக்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்
கடிக்க பாயும் தெரு நாய்கள்... குதறும் கொசுக்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்
கடிக்க பாயும் தெரு நாய்கள்... குதறும் கொசுக்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்
ADDED : ஆக 28, 2024 06:09 AM
திண்டுக்கல் : சேதமான ரோடுகள்,ஒருபுறம் மட்டும் அமைக்கப்பட்ட சாக்கடை ,மழை நேரங்களில் சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள்,பொது மக்களை துரத்தும் தெரு நாய்கள்,எந்நேரமும் கடித்து குதறும் கொசுக்கள் என ஏராளமான பிரச்னைகளில் திண்டுக்கல் திருச்சிரோடு செல்வி நகர் குடியிருப்போர் பரிதவிக்கின்றனர்.
திண்டுக்கல் திருச்சி ரோடு சுப்பிரமணியபுரம் செல்விநகர்,பசும்பொன்நகர்,எம்.ஆர்.எஸ்.நகர் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் முருகானந்தம்,செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:
இங்குள்ள தெருக்களில் பல ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் சேதமாக உள்ளது. முள்ளிப்பாடி ஊராட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள பகுதிகளில் ரோடுகளை சீரமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஒருபுறம் மட்டும் சாக்கடை அமைத்துள்ளதால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன. இங்கு சமூக விரோத செயல்களும் அதிகளவில் நடக்கின்றன.
எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிந்து அடிக்கடி மக்களை கடிக்கின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை.
ரோடெங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதால் விஷபாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது. தெரு நாய்கள் சில நேரங்களில் வெறி பிடித்து துரத்துகின்றன. ஊராட்சி நிர்வாகத்தினர் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் மழைநீர்,கழிவுநீர் செல்ல பல ரோடுகளில் சாக்கடை, வடிகால்கள் இல்லாமல் உள்ளது.
கொசு உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. இதன்மூலம் தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எந்நேரமும் கொசுக்கள் மக்களை கடிக்கின்றன. ஒருபுறம் அமைக்கப்பட்ட சாக்கடை துார்வாராமல் இருப்பதால் அதுவும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.