sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி


ADDED : ஜூன் 11, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : அய்யலுார் மணியகாரன்பட்டியை சேர்ந்த அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் வி.பாலசுப்பிரமணி, எஸ்.கல்யாணசுந்தரம், சி.பொம்மிநாயக்கர். இவர்கள் மூவரும் பணி ஓய்வு பெறும் முன்பாகவே பல ஆண்டுகளாக சொந்த கிராமப் பகுதியை சேர்ந்த கோடாங்கிசின்னான்பட்டி, மணியகாரன்பட்டி அரசு பள்ளிக்கும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது இப்பள்ளிகள் நடப்பு கல்வியாண்டிற்காக திறக்கப்பட்டதுமே நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுது பொருட்களை வழங்கினர்.

தற்போது இவர்களுடன் பாலசுப்பிரமணியின் பெங்களூர் நண்பர் ஜி.கண்ணனும் இந்த நற்பணியில் இணைந்துள்ளார். மணியகாரன்பட்டி பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியை ஈஸ்வரி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us