ADDED : மே 05, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் பழநி ரோட்டில் சவரிக்காடு அருகே ரோட்டோரம் பாறை சரிந்து விழுந்தது.
சவரிக்காடு , வடகவுஞ்சி பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. சவரிக்காடு அருகே போக்குவரத்தில்லாத நேரத்தில் பாறை ஒன்று சரிந்து ரோட்டில் விழுந்தது. ரோடு ஓரமாக விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மேலபள்ளம் பகுதியில் மழைக்கு மரம் ஒன்று சாய்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டோரம் உள்ள பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.