/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையை அகற்றிய துாய்மை பணியாளர்கள்
/
குப்பையை அகற்றிய துாய்மை பணியாளர்கள்
ADDED : செப் 11, 2024 12:53 AM

திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் ரோட்டோரங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தினர்.
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உட்பட்ட சென்னமநாயக்கன்பட்டி பகுதிகளில் ரோட்டோரங்களில் குப்பையை குவித்து எரிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.
இதோடு ரோடு,குடிதண்ணீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லை.
இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் உங்கள் ஊராட்சி பகுதியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று காலை செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துாய்மை பணியாளர்கள் சென்னமநாயக்கன்பட்டி ரோட்டோரங்களில் குவிக்கப்பட்டிருந்த குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.