sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

/

ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை

ரூ.4.66 கோடி கையாடல் சரவணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை


ADDED : ஆக 01, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்து சிறையில் உள்ள சரவணனை,3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்தது.

திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகராட்சியில் கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார். 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4.66 கோடியை கையாடல் செய்தார். இந்தவிவகாரம் வெளியில் வர மாநகராட்சி நிர்வாகம் சரவணனை சஸ்பெண்ட் செய்தது .

இவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி பிரியா, நேற்றிலிருந்து (ஜூலை31) ஆக.2 வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்.அதன்படி போலீசாரும் சரவணனை அழைத்து சென்று விசாரித்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us