ADDED : செப் 07, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். 2ம் ஆண்டு மாணவி கிர்த்திகா வரவேற்றார்.
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் வி.ரவீந்தர் பேசினார். மாணவி நித்யா நன்றி கூறினார்.