sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்; சகதியில் தடுமாறும் ஓட்டிகள் பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்

/

ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்; சகதியில் தடுமாறும் ஓட்டிகள் பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்

ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்; சகதியில் தடுமாறும் ஓட்டிகள் பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்

ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்; சகதியில் தடுமாறும் ஓட்டிகள் பரிதவிப்பில் பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர்


ADDED : பிப் 28, 2025 06:34 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பல ஆண்டுகளை கடந்தும் சீரமைக்கப்படாத ரோடுகள், வடிகால் இருந்தும் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர், எப்போதும் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனை, மழை நேரங்களில் ரோட்டில் ஆறுபோல் ஓடும் மழைநீர், சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், பொது மக்களை துரத்தும் தெரு நாய்கள், டெங்கு காய்ச்சலை உற்பத்தியாக்கும் கொசுக்கள், ஆக்கிரமிப்புகள் என ஏராளமான பிரச்னைகளில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர் தவிக்கின்றனர்.

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பழனியப்பா எஸ்.பி.ஆர்.நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சரவணன்,பொருளாளர் பழனிசாமி,செயலாளர் கார்த்திகேய பெருமாள்,நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டீபன்,பெருமாள்,சேக்முகமது,ரெங்கராஜ் கூறியதாவது: 1 முதல் 5 தெருக்களை கொண்ட இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் சீரமைக்கபடாமல் சேதமாக கிடக்கிறது. வடிகால் இப்பகுதி தெருக்களில் இருந்தும் எந்த பலனும் இல்லாமல் கழிவுநீர் ரோட்டோரங்களில் தேங்கி நிற்கிறது. 2 தெரு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை உற்பத்தியாக்குகிறது. பல ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். வடிகால் அமைத்தவர்கள் தாழ்வாக அமைத்ததால் இப்பிரச்னை தொடர்கிறது. இதுஒருபுறம் இருக்க தெருக்களில் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்புகளாக உள்ளது. இங்கு நடக்கும் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் மவுனமாக உள்ளனர். எத்தனையோ அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. மழைநீர் மாதக்கணக்கில் தேங்கி சகதியாக மாற அவ்வழியில் வரும் மக்கள் தடுமாறுகின்றனர். எண்ண முடியாத அளவிற்கு தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து வருவதில்லை. தெரு விளக்குகள் முறையாக அமைக்காததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளது. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை என்றனர்.






      Dinamalar
      Follow us