/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டறைகளில் சேமிக்கப்படும் சின்ன வெங்காயம்
/
பட்டறைகளில் சேமிக்கப்படும் சின்ன வெங்காயம்
ADDED : மார் 10, 2025 01:11 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம் அடைந்த நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நல்ல விலை வரும் வரை சேமிக்க தொடங்கியுள்ளனர்.
ஒட்டன்சத்திரம், புலியூர்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்த நிலையில் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. உரம் விலை, நடவு, அறுவடை செய்வதற்கான கூலி உயர்ந்துள்ளதால் இந்த விலை கட்டுபடியாகாமல் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கிலோ ரூ.50க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும். இதனால் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை மூங்கில் பட்டறைகளில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்க முடிவெடுத்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
''சின்ன வெங்காயம்நடவு கூலியாக ஒரு நாளைக்கு ரூ.500 கொடுத்த நிலையில் தற்போது அறுவடைக்கு ரூ.350 வரை கொடுக்க வேண்டியுள்ளது. இத்துடன் உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக இந்த விலை கட்டுபடியாகாது. இதனால் பட்டறைகளில் வைத்து சேமிக்கிறோம். கட்டுபடியான விலை கிடைக்கும் போது விற்பனை செய்வோம்'' என்றனர்.