ADDED : செப் 06, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன் 54.
இவர் குடியிருக்கும் வீட்டை தம்பி அம்மாசி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதை முனியப்பனின் மகன் சதீஷ்குமார் 30 , கண்டித்தார். தந்தை முனியப்பன், மகன் சதீஷ்குமாரிடையே தகராறு ஏற்பட்டதில் மகன் பிளேடால் தந்தையின் கழுத்து, தோள்பட்டையில் வெட்டினார்.
படுகாயமடைந்த முனியப்பன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.