sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு

/

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு


ADDED : ஜூன் 05, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே வி.குரும்பபட்டி எல்லம்மாள், ஐனேரியம்மாள், கருப்புசுவாமி கோவில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் சாட்டையடி பெற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோவில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. சுவாமி கரகங்கள் சேர்வை ஆட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வர, சிறப்பு பூஜைகள் நடந்தன. விரதமிருந்த பக்தர்கள் கோவில் முன் அமர்ந்திருக்க, அவர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக பூஜாரி ஆறுமுகம் உடைத்தார்.

அதன் பின் பக்தர்கள் தலா ஒரு சாட்டையடி பெற்றபடி நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த வினோத வழிபாட்டை காண, சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஏற்பாட்டினை குரும்ப கவுண்டர் சமூகத்தின் லகும, சித்த, லக்கையா வம்சத்து பங்காளிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us