ADDED : ஆக 19, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட், பூஞ்சோலை, காமராஜர் சாலை, வி.எம்.எஸ் காலனி, அஞ்சுகம் காலனி மேட்டுப்பட்டி, கீழக்கோட்டை, செக்காபட்டி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் ஏராளமான தெரு நாய்கள் உலவுகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை போதிய உணவு, பராமரிப்பு கிடைக்காத நிலையில் உள்ளன. குப்பை கழிவுகளில் வீசப்படும் அழுகிய உணவுப்பொருட்களையும், வணிக நிறுவனங்களிலிருந்து வீசப்படும் இறைச்சி கழிவுகளையும் உணவாக உட்கொள்கின்றன.
டூவீலர்களில் செல்வோர், பாதசாரிகளை கடித்து, தாக்குகின்றன. சில நாட்களாக தெரு நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இவற்றைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

