ADDED : செப் 07, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வரவேற்பு விழா நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார்.
துறைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். 3ம் ஆண்டு மாணவி பானுப்பிரியா வரவேற்றார்.மாணவி ஹரிணிலட்சுமி தொகுத்து வழங்கினார். பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி நவீனா நன்றி கூறினார்.