/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் தற்கொலை முயற்சி
/
போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 04, 2024 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் யுவராஜ் குமார் 29, கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் குமார் 29. இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் விசாரணைக்காக வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு கழிப்பறைக்குள் சென்றவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை கொண்டு கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.