ADDED : ஆக 25, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: பஞ்சமியை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர், உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம், மகா தீபாராதனை நடந்தது.
காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடை தண்டினி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் பஞ்சமி சிறப்பு பூஜைகள் நடந்தது.