
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிழா ஏப்.30ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்த தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.