ADDED : ஆக 27, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் கிழக்கு நோக்கிய காலபைரவர் சன்னதி உள்ளது.
இங்கு ஆவணி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மஞ்சள் பட்டு, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காலபைரவர், மூலவரை தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், தொப்பம்பட்டி திருவேங்கடமுடையான் கோயிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.