/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பந்தாடப்பட்ட தெருக்கள்; தேங்கும் கழிவுநீர் ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் தொடரும் அவலம்
/
பந்தாடப்பட்ட தெருக்கள்; தேங்கும் கழிவுநீர் ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் தொடரும் அவலம்
பந்தாடப்பட்ட தெருக்கள்; தேங்கும் கழிவுநீர் ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் தொடரும் அவலம்
பந்தாடப்பட்ட தெருக்கள்; தேங்கும் கழிவுநீர் ஒட்டன்சத்திரம் நகராட்சி 15வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : செப் 14, 2024 05:29 AM

ஒட்டன்சத்திரம்: குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாததால் வாகனங்களை இயக்கச் சிரமம், புதர் சூழ்ந்த சாக்கடை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 15 வது வார்டில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன.
காளியம்மன் கோயில் மேற்கு, சாஸ்தா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் அதிகரித்து வரும் விரிவாக்க பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும்.சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் பகுதியில் செல்லும் சாக்கடையில் புற்கள் முளைத்து கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுகாதாரம் பாதிக்றது.
நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் தேவையான தெருவிளக்குகள், ரோடுகள் வசதி இல்லை .ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு ,மேற்குப் பகுதியில் உள்ள சப்வேயை மழைக்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வீடுகள் தோறும் குப்பை வாங்கப்படுகிறது. இருந்த போதிலும் காலியிடங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
தேங்கும் கழிவு நீர்
சாய்.ஏ.மணிகண்டன், பா.ஜ., நகர செயலாளர்: சாஸ்தா நகர் சாக்கடையில் செடி கொடிகள் முளைத்து ஓடையை மறைத்துள்ளது. இந்த ஓடையை அடிக்கடி துார்வாரி கொசுத்தொல்லையை போக்க வேண்டும். சாக்கடையில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். விரிவாக்க பகுதிகளில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.
தெரு ரோடுகளை சீரமையுங்க
எம்.முருகேசன், மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர்: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சப்வேயில் தண்ணீர் தேங்காமல் இருக்க கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு சப்வேயிலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் தெற்கு பகுதியில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால் வார்டுக்குள் செல்ல சிரமமாக உள்ளது.குடிநீர் குழாய்கள் அமைக்க தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதனை சீரமைக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
ஜெயமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): துாய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று குப்பையை வாங்குகின்றனர். அவர்கள் வந்து சென்ற பிறகு சிலர் காலியிடங்களில் குப்பையை கொட்டி விடுகின்றனர். சாஸ்தா நகர் பகுதியில் சாக்கடை அமைத்து தரப்படும் . தோட்டத்துப் பகுதியில் புதிதாக ரோடு போடப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தோட்டத்துப் பகுதி குடியிருப்புகளுக்கு தரை மேல் தொட்டி அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.