/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசு மாட்டை அடித்து கொன்றவர் கைது
/
பசு மாட்டை அடித்து கொன்றவர் கைது
ADDED : ஜூலை 21, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: ஐ.வாடிப்பட்டியில் முன் விரோதம் காரணமாக பசுமாட்டை சுத்தியலால் அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஐ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேலு 66. இங்கு தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தோட்டத்தில் பசு மாடு, கன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பசுமாட்டினை தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் முன் விரோதத்தில் சுத்தியலால் அடித்ததில் மாடு இறந்தது. கள்ளிமந்தையம் போலீசார் கருப்பனை கைது செய்தனர்.