/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகா கோஷத்துடன் கோலாகலமாக தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு
/
முருகா கோஷத்துடன் கோலாகலமாக தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு
முருகா கோஷத்துடன் கோலாகலமாக தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு
முருகா கோஷத்துடன் கோலாகலமாக தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு
ADDED : ஆக 25, 2024 02:29 AM
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
பழநி பழநியாண்டவர் கலை கல்லுாரியில் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று துவங்கியது. ஐந்து ஆய்வகங்கள்,1300 ஆய்வு கட்டுரைகள், முப்பரிமாண முருகன் பாடலரங்கம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றுள்ளன.
மாநாட்டை குன்றக்குடி அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். மாநாட்டு நுழைவு வாயிலை அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு திறந்து வைத்தனர்.
கண்காட்சி அரங்கம் முன்பு அமைக்கப்பட்டிருந்த 100 அடி கொடிக்கம்பத்தில் முருகன் மாநாடு கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றினார்.
சீர்காழி சிவ சிதம்பரம் முருகன் பாடலை பாட முருகன் பக்தி கோஷங்கள் இடையே மாநாடு தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார்.
மாநாட்டு சிறப்பு மலரை அமைச்சர் பெரியசாமி வெளியிட நீதிபதி சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி, சிவ ஞானம், வேல்முருகன், திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர், செங்கோல், சிரவை, திருப்பா திரிப்புலியூர், தருமபுரம், மதுரை, பொம்மபுரம், திருப்பனந்தாள், சூரியனார்கோயில், வேளாக்குறிச்சி ஆதினங்கள், எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, கூடுதல் ஆணையர் சுகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள், பக்தர்கள், ஆன்மிக் சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற ஆதினங்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்பட அனைவருக்கும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.