/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது
/
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர் கைது
ADDED : ஆக 24, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புதிய திராவிட கழகம் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் ராஜா 28; புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக உள்ளார்.
ஆக.17 இரவு தனது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இது குறித்த போட்டோ வைரலானது. இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி , ராஜாவை கைது செய்தார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.