/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் அவதி
/
பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் அவதி
ADDED : மே 11, 2024 05:41 AM
எரியோடு: வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
பல கிராமங்களை சேர்ந்த 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். பள்ளியின் முன் பகுதியில் குறிப்பிட்ட துாரத்திற்கு,அலுவலகம் அமைந்துள்ள மேற்கு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதிலும் சில பகுதிகள் சரிந்து கீழே விழுந்து கிடைக்கின்றன. மற்ற இரு திசைகளிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. பள்ளியை சுற்றிலும் ஏராளமான விவசாய நிலங்கள், ஓடை இருப்பதால் விஷப்பூச்சிகள் தடையின்றி எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது. அனுமதியின்றி பலரும் புகுந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், அதை கண்டித்தால் பள்ளி நிர்வாகத்தினரை அவர்கள் மிரட்டுவதும் உண்டு. பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.