ADDED : மே 20, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டி வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா மே 14ல் சாமி சாட்டுதல்,காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடந்தது.
நேற்று உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். விழாவில் இன்று அம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நாளை அம்மன் அலங்கரித்து ஊர்வலம் அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மே 23ல் மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா முடிகிறது.

