/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது
/
சரக்கு வாகனத்தை திருடிய மூவர் கைது
ADDED : ஆக 27, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லையடுத்த பாலகிருஷ்ணாபுரம் சந்துரு நகரை சேர்ந்தவர் ராஜசேகர் 51. இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை திண்டுக்கல் - பழைய கரூர் ரோடு பெஸ்கி கல்லுாரி எதிர்புறம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் சிலர் திருடி செல்வது தெரியவந்தது.
திண்டுக்கல் தாலுகா போலீசார் வாகனத்தை துரத்தி சென்றனர். முள்ளிப்பாடி அருகே பிடித்தனர். விசாரணையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா 27,உதயன் 65 ,மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

