sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

/

தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடியில் விடிய விடிய மழை மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 10, 2024 11:20 PM

Google News

ADDED : மே 10, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யத் துவங்கி இரவு, 9:00 மணிக்கு பின் சூறாவளியுடன் கனமழை விடிய விடிய கொட்டியது.

இதில், தடியன்குடிசை - குப்பம்மாள்பட்டி ரோட்டில் 10க்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தன. வத்தலக்குண்டு - தாண்டிக்குடி ரோட்டில் பட்லங்காட்டில் மண் சரிவு ஏற்பட்டது. தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடையூறுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம், 2:00 மணிக்கு பின்னரே பட்லங்காடு பகுதியில் மண் சரிவு சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து துவங்கியது.

கொடைக்கானல் -அடுக்கம் ரோட்டிலும் கனமழையால் வெவ்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்து இடையூறுகளை சரிசெய்தனர்.






      Dinamalar
      Follow us