ADDED : மார் 11, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயபாண்டி.
2018ல் எரியோடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். எரியோடு போலீசார் போக்சோவில் ஜெயபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
ஜெயபாண்டிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.