/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி
/
மரத்தில் டூ - வீலர் மோதியதில் இருவர் பலி
ADDED : ஆக 27, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், -சாணார்பட்டி அருகே காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 20, கூலித்தொழிலாளி.
இவருடன், நண்பர்களான அய்யலுாரைச் சேர்ந்த சசிக்குமார், 19, அதே பகுதி பிரதீப், 18, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல், செங்குறிச்சி ரோட்டில் சென்றனர்.
சசிக்குமார் டூ - வீலரை ஓட்டினார். வங்கமானுாத்து வந்தபோது நிலை தடுமாறிய டூ - வீலர், சாலையோர தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி, சசிக்குமார் இறந்தனர்.
காயமடைந்த பிரதீப்,திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.