sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நல்லா இருந்த ரோட்டில் 'மில்லிங்' தினமும் தவிக்கும் டூவிலர் ஓட்டிகள்

/

நல்லா இருந்த ரோட்டில் 'மில்லிங்' தினமும் தவிக்கும் டூவிலர் ஓட்டிகள்

நல்லா இருந்த ரோட்டில் 'மில்லிங்' தினமும் தவிக்கும் டூவிலர் ஓட்டிகள்

நல்லா இருந்த ரோட்டில் 'மில்லிங்' தினமும் தவிக்கும் டூவிலர் ஓட்டிகள்


ADDED : ஜூன் 14, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மில்லிங் செய்த ரோடுகளில் நாள் கணக்கில் புதிய தார்ரோடு அமைக்காமல் இருப்பதால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதியதாக ரோடு அமைக்கும் போது கடைகள் , வீடுகள் தாழ்வாக மாறி மழைநீர் புகும் அபாயம் உள்ளது என்பதால் ரோடுகள் அடுக்கடுக்காக அமைக்காமல் பழைய ரோட்டை தோண்டியெடுத்து (மில்லிங்) தார் ரோடு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய ரோடு அமைக்க ரோடை கீற்றுகளாக தோண்டி வைத்துள்ளதால் அவ்வழியாக செல்லும் டூ வீலர்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. லேசாக ரோட்டை கீறிவிட்டதாக நினைத்து செல்லும் போது, டயர் நல்ல நிலையில் இல்லையெனில் சறுக்கி விபத்து ஆபத்து ஏற்படுகிறது.

ரோடுகளை மில்லிங் செய்த பின் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை அப்படியே போட்டு வைக்கின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் ரோடுகளை இவ்வாறு செய்வதால், டூ வீலரில் சென்று வருவோர் அதிகம் பாதிக்கின்றனர்.

திண்டுக்கல் எஸ்.பி., முகாம் அலுவலகம் தொடங்கி மெங்கில்ஸ் ரோடு இணைப்பு, பஸ் ஸ்டாண்ட், பூ மார்கெட் வரை உள்ள நீளமான ரோடான ஏ.எம்.சி., ரோடு நகரின் தெருக்களில் உள்ள பல்வேறு ரோடுகளை புதிய ரோடு போடுவதற்காக மில்லிங் செய்துள்ளனர். ஆனால் இதுவரை புதிய ரோடு அமைப்பதற்கான எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. மக்கள் பயன்படுத்தும் ரோட்டை இப்படி செய்து வைத்திருப்பது வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது : ரோட்டை மில்லிங் செய்தால் அதேநாள் அடுத்த நாளில் புதிய தார்ரோடு அமைக்க வேண்டும். மாறாக, ரோட்டை கீறி சேதமாக்கிவிட்டு வாரக்கணக்கில் பணிகள் துவங்காமல் இருக்க கூடாது. அவ்வாறு விடும் போது டூ வீலரில் செல்வோர் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. குடும்பத்துடன், குழந்தைகளுடன் செல்லும் போது ஆபத்து அதிகம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். மில்லிங் செய்யும் ரோடுகளில் 24 மணி நேரத்துக்குள் தார்ரோடு அமைக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us