/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலுப்பகுடி முத்தாலம்மன் கோயில் விழா
/
உலுப்பகுடி முத்தாலம்மன் கோயில் விழா
ADDED : மே 03, 2024 06:36 AM

நத்தம்: நத்தம் அருகே உலுப்பகுடி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏப்.25 ல் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில் தோரண மரம் ஊன்றுதலை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோயில் முன் உள்ள மந்தைக்கு சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு,மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.