/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராளிபட்டி முத்தாலம்மன் கோயில் விழா
/
ஊராளிபட்டி முத்தாலம்மன் கோயில் விழா
ADDED : ஏப் 06, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே ஊராளிபட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோயில் முன் உள்ள மந்தைக்கு சென்றது.
பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து மறுநாள் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

