ADDED : மே 28, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக உற்ஸவம் சமீபத்தில் நடந்தது.
இதை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சந்நிதியில் வெள்ளிக் கலசம் வைத்து சாந்தி ஹோமம் செய்தனர். உச்சிகால பூஜையில் பழநி முருகன் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர், செல்வகுமார், நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன் பங்கேற்றனர். செல்வசுப்பிரமணியம் குருக்கள் யாக பூஜை செய்தார். மாலையில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் உற்ஸவ சாந்தி நிகழ்ச்சி நடந்தது.