ADDED : செப் 16, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், யாக பூஜை நடந்தது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடந்தது.
செல்வசுப்ரமணியம் குருக்கள் பங்கேற்றார். குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வேளீஸ்வரர் கோயில் கலசாபிஷேகம் நடந்தது.

