sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் வாகன நுழைவுக்கட்டணம் உயர்வு

/

பழநியில் வாகன நுழைவுக்கட்டணம் உயர்வு

பழநியில் வாகன நுழைவுக்கட்டணம் உயர்வு

பழநியில் வாகன நுழைவுக்கட்டணம் உயர்வு


ADDED : மார் 09, 2025 02:48 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பார்க்கிங் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் பழநிக்கு வரும் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கானோரும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் வந்து செல்வர்.

வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் உட்பட அடிப்படை வசதி இருப்பதாக கூறியே இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் போதிய பார்க்கிங் வசதி கிடையாது. தனியார் பார்க்கிங்கில் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது நுழைவுக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் 1க்கு நாள் ஒன்றுக்கு ரூ.130 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிக்கு ரூ.100லிருந்து ரூ.115, வேனிற்கு ரூ.90 லிருந்து ரூ.100, காருக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

பக்தர்கள் கூறியதாவது: சுற்றுலா வாகனங்களுக்கு தான்கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் சொந்த வாகனங்களுக்கும் வசூலிக்கின்றனர். நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு தனியார் பார்க்கிங் வேறு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. குடிநீர் உட்பட எந்த வசதிகளும் இல்லை. கேட்டால் தேவஸ்தானம் வேறு, நகராட்சி வேறு என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us