/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
/
வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
ADDED : செப் 02, 2024 12:27 AM

கோபால்பட்டி : கோபால்பட்டி வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பூசாரி அரிவாள் மீது ஏரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
கோபால்பட்டி வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் தெருவிலுள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா ஒரு வாரமாக நடந்தது.
சாமி சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்னர் அம்மன் அலங்கரித்து கோயிலில் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நேற்று நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகளுடன் முளைப்பாரி சுமந்துவர ஊர்வலமாக வேம்பார்பட்டி, கோபால்பட்டி வழியே அழைத்து செல்லப்பட்டது.
அப்போது செல்லும் வழியில் கோபால்பட்டி காளியம்மன் கோயிலின் முன்பு பூசாரி அரிவாள் மீது ஏறி நின்றபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இறுதியில் அம்மன் குளத்தில் சாமி கரைக்கப்பட்டது. மஞ்சள் நீராட்டமும் நடந்தது.