sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொழிலாளர்களுக்கு ரூ.96.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

/

தொழிலாளர்களுக்கு ரூ.96.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளர்களுக்கு ரூ.96.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளர்களுக்கு ரூ.96.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ADDED : மார் 02, 2025 05:06 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: 2021 முதல் தற்போது வரை 87,173 தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 96 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக,'' தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

மாவட்டத்தில் எத்தனை நலவாரியங்கள் செயல்படுகிறன்றன


தமிழக அரசு கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு தொழிலாளர் , வேலைவாய்ப்புத் துறை நாள்28.04.1999- ன்படி தனித்தனி வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் என 18 நலவாரியங்கள் செயல்படுகிறது.

நலவாரியத்தில் உறுப்பினராகுவது எப்படி


நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்வதற்குwww.tnuwwb.tn.govஎன்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் உள்ள அனைத்து வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். பதிவு பெற்ற நலவாரிய அடையாள அட்டை உள்ள தொழிலாளர்கள் பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் செய்ய வேண்டும் .தொழிலாளர்கள் தங்களது அட்டையில் குறிப்பிட்டுள்ள காலத்தில் புதுப்பித்தல் செய்ய வேண்டும்.

பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை


திண்டுக்கல் மாவட்டத்தில் 1,49,693 தொழிலாளர்கள் உள்ளனர். 2021 மே முதல் 2025 ஜன. , வரை 87,173 தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 96 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன


கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம் ,ஈமச்சடங்கு, விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் போன்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பெண் ,திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கி மருத்துவ பரிசோதனை, தொழிலாளர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம், எம்.பி.பி.எஸ்., போன்ற உயர்கல்வி பயில உதவி தொகையும் கொடுக்கப்படுகிறது.

ஓய்வூதியம் குறித்து


மாவட்டத்தில் 15,281 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். 60 வயது பூர்த்தியடைந்த பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1200 வழங்கப்படுகிறது. அதோடு கை, கால் , முற்றிலும் செயலிழந்த 60 வயதை பூர்த்தியடையாத தொழிலாளர்களுக்கு முடக்கு ஓய்வூதியமாக ரூ.1200 வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் கணவர், மனைவிக்கு மாதம் ரூ.500 குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us