sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது

/

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது

கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி கைது


ADDED : ஆக 20, 2024 08:28 PM

Google News

ADDED : ஆக 20, 2024 08:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் குடும்ப தகராறில் ஆத்திரத்தில் கணவரை குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் முருகபவனம் இந்திரா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன்50. இவரது மனைவி மோகனா தேவி 48. கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று அதிக மது போதையில் இருந்த கண்ணன் வீட்டிற்கு வந்து மனைவி மோகனா தேவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மோகனா தேவி, தான் கையில் வைத்திருந்த கத்தியால் கணவரை மூன்று இடங்களில் குத்தி கொலை செய்தார். தகவல் அறிந்த மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா,எஸ்.ஐ., மலைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக மோகனாதேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணன் தாமாகவே கத்தியை கையிலே வைத்து கொண்டிருந்த பொழுது கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டு இறந்தார் என தெரிவித்தார். இதை நம்பாத போலீசார் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்திய போது ஆத்திரத்தில் மோகனா தேவி, கணவர் கண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது. போலீசார் மோகனா தேவியை, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us