ADDED : ஆக 09, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உலக தாய்பால் வார விழா கருத்தரங்கம் நடந்தது.
குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மேற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய விழாவிற்கு டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். சங்கம் சார்பில் உபகரணங்கள், பெண்களுக்கு சத்துணவு, உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், செயலர் பார்க்கவி, மேற்கு ரோட்டரி தலைவர் புருேஷாத்தமன், மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி, டாக்டர்கள் திருநாவுக்கரவு, சுரேஷ்பாபு, செந்தில்குமரன், பூங்கொடி, புவனேஸ்வரி, ஷாலினி பங்கேற்றனர்.