sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

10 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்ததால் பரிதவிப்பு; பொது இடங்களில் திணறும் மக்கள்

/

10 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்ததால் பரிதவிப்பு; பொது இடங்களில் திணறும் மக்கள்

10 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்ததால் பரிதவிப்பு; பொது இடங்களில் திணறும் மக்கள்

10 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்ததால் பரிதவிப்பு; பொது இடங்களில் திணறும் மக்கள்

3


ADDED : அக் 28, 2024 07:36 AM

Google News

ADDED : அக் 28, 2024 07:36 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு,: திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைவதால், வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமப்படும் நிலை உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய்க்கு குறியீடு அறிமுகம் செய்யும் முன்னரே 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. அதில் இருவித உலோகங்களை பயன்படுத்தி நடுவட்டத்திற்குள் 10 என பொறித்து, மேலே 15 கோடுகள் இருந்தன. சில ஆண்டுகள் கழித்து அறிமுகமான ரூபாய் குறியீடு ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் அச்சிடப்பட்டது. பின்னர் வெளியான 10 ரூபாய் நாணயங்களில் இருவித உலோக வட்டங்களையும் இணைக்கும் வகையில் '10' என அச்சிட்டு மேலே 15 கோடுகள் இருந்தன. முதலில் ரூபாய் குறியீடு இல்லாமல் வெளியான 10 ரூபாய் நாணயங்கள் போலி என பரவிய வதந்தி திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் பரவியது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மக்கள் ஒட்டுமொத்தமாக இருவித ரூ.10 நாணயங்களையும் ஒதுக்கினர். அதே நேரம் மதுரை, திருச்சி மாவட்டங்களில் பரவலாக அனைத்து தரப்பினராலும் ஏற்கப்பட்டது. வதந்தி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் ஏற்படாமல் வீடுகள், கடைகளில் பெருமளவில் முடங்கியது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவித நாணயங்களும் செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியிட்டனர்.

அரசு பஸ்களில் ஏற்க வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. இருந்தாலும் பரவலாக மக்களின் மனநிலையில் வதந்தியின் வடு மறையாததால் முழுஅளவில் புழக்கம் ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் 10 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தற்போது வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இதனால் வணிக பரிவர்த்தனையில் மக்கள், வியாபாரிகளிடையே சிரமம் உள்ளது.






      Dinamalar
      Follow us