ADDED : பிப் 25, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி பழநி கோயிலில் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் வெள்ளி சங்க உட்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்ப யாகம் நடைபெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்ட 1008 சங்கு நீரை கொண்டு உச்சிகால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.