sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது

/

மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது

மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது

மின் பணிகளை தடுத்த 13 விவசாயிகள் கைது


ADDED : மார் 01, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 01, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம் : தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளை தடுக்க முயன்ற அப்பியம்பட்டி விவசாயிகள் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது பெண் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்தார்.

அப்பியம்பட்டியில் தனியார் காற்றாலைகள் பல உள்ளன. இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கம்பங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இடையூறாக இருக்கும் என கூறி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் நடந்த மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளை விவசாயிகள் தடுத்து போராட்டம் நடத்தினர்.

ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன் தலைமையிலான போலீசார் 6 பெண்கள் உட்பட 13 விவசாயிகளை கைது செய்தனர். அப்போது ஒரு பெண் மயங்கி விழுந்ததார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us