ADDED : ஜூலை 22, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி அருகே சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிங்காரக்கோட்டை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமாரை 25, போக்சோ வழக்கில் 2024ல் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
பிரேம்குமாருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.